31 May 2010

பயர்பாக்ஸ் 4 வடிவமைப்பில் சுறுசுறுப்பு........


தொடர்ந்து பல மாதங்களாக, கூகுள் குரோம் பிரவுசர் தன் சந்தையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் புதிய வசதிகளைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் முயற்சித்துக் கொண்டுள்ளது.எனவே மொஸில்லா தன் பயர்பாக்ஸ் தொகுப்பு 4 ஐ, எந்த விதத்திலாவது படு சூப்பராக அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதன் கட்டமைப்பை வடிவமைக்கும் குழுவின் தலைவர் மைக் பெல்ட்ஸ்நர் இது பற்றி அண்மையில் ஒரு பிரசன்டேஷன் அளித்துள்ளார்.பயர்பாக்ஸ் தொகுப்பு 4 மூன்று இலக்குகளை முதலில் நிறுத்தியுள்ளது. இந்த பிரவுசரின் இணைய தளங்களின் தேடல் வேகம் சூப்பர் பாஸ்ட் ஆக இருக்க வேண்டும். எச்.டி.எம்.எல். 5 மற்றும் பிற தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இந்த பிரவுசரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்கள் இணைய தேடலைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும்.அநேகமாக டேப்கள் அட்ரஸ் பாருக்கு மேலாக அமைக்கப்படலாம். ஹோம் பேஜ் பட்டனுக்குப் பதிலாக, ஹோம் டேப் தரப்படலாம்.

பயர்பாக்ஸ் 4 பிரவுசர் சோதனைத் தொகுப்பு வரும் ஜூன் மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சரியாக வெளிவரும் நிலையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் இறுதித் தொகுப்பு வெளியாகலாம்.மொஸில்லா மட்டுமின்றி, தங்கள் பிரவுசர்களைப் புதுப்பித்து புதியனவற்றைக் கொண்டு வர முயற்சிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பல சவால்கள் முன் உள்ளன. முதலாவதாக ஸ்பீட். இந்த பிரிவில் குரோம் மற்றவற்றை முந்திக் கொண்டு தற்போது இயங்குவதுடன், இன்னும் அதனை அதிகப்படுத்தி வருகிறது. எனவே மற்றவர்கள் இதற்கு இணையாகச் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரவுசர்களுக்கும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். திடீரென அதிரடி மாற்றங்களுடன் புதிய பிரவுசர்கள் வந்தால், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செயல்பட அவர்கள் தயங்கலாம். மூன்றாவதாக, இப்போது பிரவுசரில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மட்டுமின்றி, மொபைல் போன்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இந்த பிரிவு வேறு வகையான தொழில் நுட்பத்தினையும் சூழ்நிலைகளையும் கொண்டிருப்பதால், நிறுவனங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இணைய அப்ளிகேஷன்களில் தற்போது புதுமையான பல தொழில் நுட்பங்கள் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகப் புதிய பிரவுசர்கள் உருவாக்கப்பட வேண்டும்


.

23 May 2010

பேஸ் புக் இணைய தளத்தை தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

உலகின் முன்னணி சமூக வலையமைப்பு இணைய தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேஸ் புக் இணைய தளத்தை தற்காலிகமாக தடை செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பேஸ் புக் இணைய தளத்தில் நடத்தப்பட்ட முஹமது நபி குறித்த கார்டூன் போட்டி தொடர்பில் பாகிஸ்தான் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த வழக்கை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையதளத்தில் காணப்படும் அம்சபங்கள் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த கார்டூன் போட்டியில் பிரசூரமான ஆக்கங்கள் மற்றும் கருத்துக்கள் விமர்சனப் பாங்கானவை எனவும் அவற்றில் இஸ்லாமிய மதத்தை காயப்படுத்தக் கூடிய கருத்துக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இணையத் தளத்தை தடை செய்யுமாறு ஏற்கனவே பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இணைய பாவனைக்கு எவ்வித தடைகளும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, டென்மார்க் பத்திரிகைகளில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான கார்டூன்கள் காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

09 May 2010

கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்

கூகுளின் அதிவேக வளர்ச்சிக்கு முன் வேறுயாரும் அருகில் கூட நிற்க்க முடியாது என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறது இதன் வேகம் மட்டுமல்ல விவேகமும் தான் இதன் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்று கூறினாலும் அது மிகையாகாது.

கூகுளின் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் இந்த கூகுள் டெஸ்க்டாப் 3D டெக்னாலஜி விண்டோஸ் மட்டுமல்ல மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இதுவரை இல்லாதவாறு அனைத்து டெஸ்க்டாப் அப்ளிகேசனும் 3D -யில் காட்டி வியக்கவைக்கின்றனர் அதுமட்டுமின்றி டெஸ்க்டாப்-ல் அப்ளிக்கேசன் ஐகானை வைத்து மிகப்பெரிய விளையாட்டை நம் கண்முன் காட்டி அசத்தியுள்ளனர்.

டெஸ்க்டாப்-ல் உள்ள ஐகானை சுவற்றில் மாற்றி தொங்கவிடுவதுபோல் தொங்க விடலாம் அதோடு படங்களை பார்க்கவும் 3D யில் காட்டி
அசத்துகின்றனர்.


03 May 2010

அமிதாப்புக்கு ஜோடியாகும் குஷ்பு

அமிதாப்புடன் ஒரு இந்திப் படத்தில் ஜோடி சேருகிறார் நடிகை குஷ்பு. ஜூன் ஆர் தமிழ் படத்தை இயக்கியவர் ரேவதி வர்மா. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
ஆப் கே லியே ஹம் என்ற இப்படத்தில் மாதவன், ஜெயாபச்சன், ரவீனா டன்டன், ஆயிஷா தாகியா நடிக்கின்றனர்.


இந்தப்படத்துக்குப் பிறகு ரேவதி வர்மா இயக்கும் புதிய இந்திப் படம் 'மேட் டாட்'.

இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து ரேவதி வர்மா கூறுகையில், "அப்பா- மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்குகிறேன். அப்பா வேடத்துக்கு அமிதாப் பச்சன்தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளேன். அவரது மனைவியாக குஷ்பு நடிக்கிறார். மற்ற நடிகர் , நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளேன்" என்றார் ரேவதி.

இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More