24 January 2010

பொங்கல் ஸ்பெஷல். தனுஷ் – ஸ்ரேயா டூயட் பேட்டி!

கந்தசாமி படத்தின் பரபரப்பு பட்டென்று அடங்கிப்போக ஸ்ரேயா அவ்வளவுதான் என்று சொன்ன வாய்களை குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு என மூன்று படங்க்களில் நடித்து முடித்து குட்டி பட்த்தின் ரிசல்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரேயா.

மேலும் படங்கள்

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்


ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts(Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.

இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.

பாலாவிற்கு முதல் வாழ்த்து மணிரத்தினம், ரஜனி பூங்கொத்து!

தமது நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் தமிழ்சினிமாவின் பிதாமகன் என்று ஆனந்த விகடனால் பாராட்டு பெற்ற இயக்குனர் பாலா. பாலா கடைசியாக இயக்கிய நான் கடவுள் படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ்ப் பற்று கொண்ட இயக்குனர்கள் கொண்டாடுகிறார்கள்.

முதல்வாழ்த்து மணிரத்தினத்திடமிருந்து. இரண்டாவது பூங்கொத்து வழியே ரஜினி. பாலா அலுவலகத்தில் குவிந்து வரும் பூங்கொத்துக்கள் போலவே உதவி இயக்குனர்களும் பாலா அலுவலக்கத்தில் கூட்டம் கூட்டமகாக் குவிந்து பாலாவை வாழ்த்துகிறார்கள். பாலா இளையதலைமுறையிடம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அத்தகையது.பாலாவிற்கு wathani சார்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த நேரத்தில் பாலா பற்றி ஆ.வி வெளியிட்ட 25 குறிப்புகள் 4தமிழ் நேயர்களின் பார்வைக்கு மீள் பந்தி வைக்கிறோம்
* பாலாவின் பெயர்இ பாலசுப்ரமணியன்.ஆனால்இ வீட்டில் அனைவரும் அழைப்பது ‘அபேஸ் பாலையா’. வீட்டில் காசு முதற்கொண்டு பொருட்கள் திடீர் திடீரெனக் காணாமல் போனதினால் கிடைத்த சிறப்புப் பட்டம் !
* பாலு மகேந்திராவுக்கும் சிவக்குமாருக்கும் பாலா ‘மூத்த மகன்’. சேரனுக்குஇ‘மருமகனே’..... சீமானுக்குஇ ‘இளையவரே’.......ரோஹிணிக்குஇ‘மகனே’...விக்ரமுக்குஇ ‘டார்லிங்’....சூர்யாவுக்குஇ ‘அண்ணா’ !
* மணிரத்னம்இ பாலாவின் ரசிகர்.பாலாவோ.....மணிரத்னத்தின் பக்தர்.இந்த அபூர்வ நட்பு அதிகம் வெளியே தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தள்ளுவதில் மணி சாருக்கு ஏனோ பிரியம் !
* இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே பீடி குடித்தவர்.....இப்போதும் புகைக் பழக்கம் தொடர்கிறது. யார் முன்னும் தயங்காமல் புகைப்பவர். மனைவி முன் மட்டும் சிகரெட்டைத் தொடவே மாட்டார் !
* விழாஇ நிகழ்ச்சி என பாலாவைக் கூப்பிட்டால்இ ஓடி ஒளிவார். மைக் முன் நிறுத்திவிட்டால்இ ‘வாழ்த்துக்கள்’ என ஒற்றைச் சொல்லோடு மேடையில் இருந்து இறங்கிவிடுவார் !
* பாலாஇஎப்போதுமே அப்பா பிள்ளை. அப்பாவியாகவே வாழ்ந்தஇ ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அப்பாவின் நினைவு மேலெழும்பினாலோஇ அவரைப்பற்றிய பேச்சு கிளம்பினாலோஇ கண்ணீரில் நனைந்து அழுகையில் முடிவார் !
* மனிதப் பற்களால் ஆன கபால மாலையும்இஸ்படிக மாலையும் அணிந்திருப்பார். காசி சென்று திரும்பிய பிறகு ஏற்பட்ட மாற்றம் இது !
* நான்கு சர்வதேச விருதுகள்இ நான்கு தேசிய விருதுகள்இ ஐந்து மாநில விருதுகள்இ ஐஐ ஃபிலிம்பேர் விருதுகள்....இதுவரை பாலா இயக்கியிருக்கும் நான்கு படங்களுக்காகக் கிடைத்த விருதுகள் இவை !
* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போனில் பேசினாலோஇ எஸ்.எம்.எஸ். ஒலி எழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார் !
* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள் தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார் !
* அதிரடி ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர் பாலா.நண்பர்களோடு சேர்ந்தால்இ பழைய சினிமா பாடல்களும்இ அதிரடி மிமிக்ரியுமாகக் கலகலப்பு தான் !
* பாலா தீவிரமான நாத்திகர். ஆனால்இ அவர் மனைவி எப்போதுஇ எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார் !
* பாலாவுக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் பிடித்தவை. விஜய் டி.வி-யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர். சன் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு? வீட்டில் இருந்தால் இரண்டு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்ப்பார் !
* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷீட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும் !
* பாலாவுக்கு மிகவும் பிடித்தது தனிமை.அதே அளவுக்கு வேடிக்கை பார்ப்பதுஇவம்பிழுப்பதுஇ ஊர் சுற்றுவதும் பிடிக்கும் !
* ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர். புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதுஇ மனசு தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். ஆனால்இ பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர் !
* பாலாவின் திருமண ஏற்பாடுகளின் போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்டஇ விளையாட்டாக ‘பிதா மகன்’ வில்லன் ரோலுக்கு ‘மகாதேவன்’ என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு !
*பாலாவின் படத்தில்‘சன்ரைஸ் ஷாட்’ டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது.ஆனால்இ சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும் !
* நண்பர்கள் மேல் பெரும் மரியாதையும்இ அன்பும் வைத்திருப்பவர். சமூகத்தின் பெரிய அந்தஸ்தில் ஆரம்பித்துஇ சாதாரண நிலைவரை நிறைய நண்பர்கள் அவர் தரப்பில் இருக்கிறார்கள் !
* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான்.காலையில் இரண்டு இட்லிஇமதியம் ஒரு கைப் பிடிச் சாதம்இஇரவு இரண்டு தோசைஇ ‘ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன் !’ என கண்கள் விரித்துச் சொல்வார் !
* சற்று இடைவேளைக்குப் பிறகு ஆர்யாஇ விஷால் நடிக்க கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் படம் செய்கிறார் பாலா. நிச்சயம் குறுகிய காலத் தயாரிப்பு. கலக்கலான காமெடிப் படமாமே !
* ‘நான் கடவுள்’ படத்துக்காக ஆர்யாஇ பூஜா இருவரின் உழைப்புக்கு உறுதியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் !
* இயக்குநர் மணிரத்னம்இ பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரின் மலர்ந்த சிரிப்பினில் ‘உயிரைத் தரிசிக்கிறேன்’ என்பார் பாலா. பாலாவுக்கு இஷ்டமான புன்னகை தெய்வங்கள் இவர்கள் !
* அப்பா பழனிச்சாமிஇசிவ பக்தர். அவர் 50 வருடங்களாகப் பூஜை செய்துவந்த குட்டி சிவலிங்கம் மட்டுமே பாலா இப்போது பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஒரே பொருள் !
*மிகவும் பிடித்த இடம் பெரிய குளம். பின்னால் உறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விநோத அமைதியை எப்பவும் ரசிப்பவர் பாலா !

சிறுநீரகத்தை குறிவைக்கும் கெமிக்கல் வெல்லம்!



''வெள்ளையாகக் கிடைக்கிற எந்த உணவும் ஆரோக்கியமானதில்லை. பால், அரிசி சாதம், மாவு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய ஐந்தும் அதில் பிரதானம்.'' ஆரோக்கிய வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்கிற பிரபலங்கள் பலரும் இவற்றைத் தவிர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கலாம். காபி, டீயை விட்டால், பாலைத் தவிர்க்கலாம். கோதுமைக்கு மாறினால், அரிசி சாதத்தை மறக்கலாம். உப்பைக் குறைத்தால் பிரச்சினையில்லை. மாவு உணவுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதில் பெரிய சிரமங்கள் இருக்க வாய்ப்பில்லை.

சர்க்கரை...?

''அதுக்குப் பதிலாதான் வெல்லம் இருக்கே.... வெல்லத்துல இரும்புச்சத்து அதிகம். கலோரி கம்மி. காபி, டீ உள்பட, சர்க்கரை தேவைப்படற எல்லா உணவுகள்லயும் வெல்லம் சேர்க்கலாம். அதுதான் ஆரோக்கியம்''
- நூற்றுக்கிழவி முதல் சத்துணவு நிபுணர்கள் வரை பலரும் இதை வலியுறுத்துவதை மறுக்க முடியாது.

அப்படியானால் வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?

ஆமாம்.

அதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. ஒரு துண்டு வெல்லத்தில் புரோட்டீன், தாதுச் சத்து, இரும்பு, கேரட்டீன், தையமின், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபிளேவின், நியாசின் என அத்தனை சத்துக்களும் உண்டு. கரும்பிலுள்ள அத்தனை சத்துக்களும் உறிஞ்சப்பட்ட பிறகு தயாரிக்கப்படுவதே சர்க்கரை. வெல்லம் அப்படியில்லை. கரும்புச்சாற்றைக் கடைசி சொட்டு தண் ர் வற்றும் வரை காய்ச்சினால் பாகு மாதிரி வரும். அதிலிருந்து வெல்லம் தயாரிக்க வேண்டும். அங்கேதான் ஆரம்பிக்கிறது பிரச்சினை.

அந்தப் பாகை சுத்தப்படுத்தாமல் அப்படியே உபயோகிக்க முடியாது. பெரியளவில் வெல்லம் தயாரிக்கிறவர்கள், கரும்புச் சாற்றை சுத்தப்படுத்த, சோடியம் ஹைட்ரோசல்ஃபேட் என்கிற ரசாயனத்தை மிக அதிக அளவில் சேர்க்கிறார்கள். வெல்லத்தின் வெளிர் நிறத்துக்காக ஆக்சாலிக் அமிலம், சூப்பர் பாஸ்பேட் மற்றும் டிடெர்ஜென்ட்டும் சேர்க்கப்படுகிறது. இதில் ஆக்சாலிக் அமிலம் என்பது நம் உடலில் உள்ள திசுக்களை அரித்து, சிதைக்கக்கூடியது. தவிர, ரத்தத்தில் உள்ள கால்சியத்தை அறவே நீக்கி, சிறுநீரகத் தொந்தரவுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் சிறுநீரகம் பழுதடையவும் காரணமாகிறது.

வெல்லத்துக்கு ஆயுள் கம்மி. காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகித்துக் கொள்ளும். அதிலுள்ள பாக்டீரியாவின் தாக்கத்தால் žக்கிரமே கெட்டுப் போகும். இதைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள் பென்žன் என்கிற ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். பிளாஸ்டிக், டிடெர்ஜென்ட், உரம் மற்றும் ரசாயனப் பொருள்கள் தயாரிப்புகளில் பிரதானமாக சேர்க்கப்படுவதுதான் இந்த பென்žன். இதை உபயோகிப்பவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல், ஞாபகமறதி போன்றவை உண்டாகலாம். தொடர்ந்து நீண்டகாலத்துக்கு உபயோகிக்கும்போது, ரத்தத்தை சுண்டச் செய்து, எலும்புகளை பாதித்து, புற்றுநோய்க்குக் கூடக் காரணமாகலாம்.

வெல்லத்தில் இத்தனை வில்லங்கமா? இதற்கு என்னதான் மாற்று? சத்துணவு ஆலோசகர் அம்பிகா சேகர் சொல்கிறார்:

''சர்க்கரையோட ஒப்பிடும்போது வெல்லம் எவ்வளவோ பரவாயில்லை. இன்னிக்கு ரசாயனக் கலப்பில்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லை. கிராமங்கள்ல, வீட்லயே சுத்தமான முறைல வெல்லம் தயாரிப்பாங்க. அதுல எந்த கலப்படமும் இருக்காது. சாதாரண வெல்லத்தைவிட, பாகு வெல்லமும் பனை வெல்லமும் சிறந்தது. சத்துகளும் அதிகம்'' என்கிறார் அம்பிகா சேகர்.

குடிக்கிற தண் ரில் இருந்து சுவாசிக்கிற காற்று வரை சகலத்திலும் கலப்படம். வெல்லம் மட்டும் விதிவிலக்கா என்ன? சரி இதற்கு என்ன தான் தீர்வு?

''ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படுகிற எந்த உணவுப் பொருளும் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். வெல்லமும் அப்படியே''.ஆரோக்கியத்தைவிட அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மனப்பான்மைதான் இன்னிக்கு இருக்கு. கைக்குத்தல் அரிசி கலர் கம்மியா இருக்கும். அது ஆரோக்கியமானது. ஆனா, வெள்ளை வெளேர்னு பாலீஷ் பண்ணின அரிசி தான் ஜனங்களைக் கவருது. அதுல சத்தே கிடையாது.

எண்ணெய்லயும், ரீஃபைன் பண்ணாதது கலர் கம்மியா, கொழகொழப்பு அதிகமா இருக்கும். அதுல சத்துக்கள் அதிகம். ஆனா ரீஃபைன்ட் பண்ணின பிறகு கண்ணாடி மாதிரி பளபளனு, சத்துகள் நீக்கப்பட்டதைத்தான் விரும்பறாங்க. இதே மனப்பான்மை, வெல்லத்துக்கும் பொருந்தும். டார்க் பிரவுன் நிறத்துல இயற்கையா தயாரிக்கிற வெல்லத்தை விட்டுட்டு, மஞ்சள் நிறத்துல கிடைக்கிறதைத் தான் விரும்பறாங்க. இதுல நிறத்துக்காக கெமிக்கல் சேர்க்கப்படுது. வெல்லத்தோட உப்புச் சுவைக்கும் அதுதான் காரணம். இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு.

ஆர்கானிக் உணவுகளுக்கு மாறிடறதுதான். ரசாயன உரங்கள் இல்லாம, இயற்கையான உரங்கள் கொண்டு பயிரிடப்படறது தான் ஆர்கானிக் விவசாயம். எல்லா உணவுப் பொருள்களும் இன்னிக்கு ஆர்கானிக் முறையால் உற்பத்தியாகிக் கிடைக்குது. வெல்லம் உள்பட. இது பார்க்கிறதுக்கு பளீர்னு இல்லாம, டார்க் பிரவுன் நிறத்துலதான் இருக்கும். சாதாரண வெல்லத்துக்கும், ஆர்கானிக் வெல்லத்துக்கும் விலையில் 20 முதல் 30 சதவிகிதம் விலை வித்தியாசம் இருக்கும். ஆனா, ஆரோக்கியத்தோட ஒப்பிடறப்ப, அந்த விலை பெரிய விஷயமில்லை.''

சரி... நல்ல வெல்லத்தை எப்படித்தான் அடையாளம் காண்பது? முதல் விஷயம், வெளுத்த மஞ்சள் நிற வெல்லம்தான் நல்லது என நினைக்காதீர்கள். ரசாயனம் சேர்க்காத நல்ல வெல்லம் டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும். கலப்பட வெல்லத்தை உபயோகித்து, கண்ட கண்ட வியாதிகளை இழுத்து விட்டுக்கொண்டு, மருத்துவர்களுக்கு மொய் எழுதுவதற்கு பதில் கொஞ்சம் மெனக்கெட்டு தேடி நல்ல வெல்லம் உபயோகிக்கலாம்.

நான் கடவுள் பாலாவிற்கு தேசிய விருது !


இயக்குனர் பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசி விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது. அவரது இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகிய நான் கடவுள் படத்தின் மூலமே, சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

இது தவிர நான் கடவுள் படத்தின் ஒப்பனைக்காக, சிறந்த மேக்கப் கலைஞருக்கான தேசிய விருது மூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடித்த பூஜாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவ்விருது கிடைக்கவில்லை. பேஷன் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவுக்கு அவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகர், ஜோகுவா மராத்திப் படத்தில் நடித்த உபேந்திராவுக்கு கிடைத்தள்ளது.

சிறந்த தமிழப்படம் என்ற விருதினை சூர்யா நடித்தவாரணமாயிரம் திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது என சினிமா வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

22 January 2010

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.


ஜனவரி 22, 2010

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது

யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை
ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன்
யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

யூடியூப்" src="http://winmani.files.wordpress.com/2010/01/youtube1.jpg?w=400&h=350" alt="" style="margin: 0px auto; display: block;" width="400" height="350">இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால்
YouTube is currently experiencing some downtime issues, reporting
a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server
error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்
விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை
என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ
ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை
அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்
முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம்
இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து
கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில்
உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம்
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இராஜதந்திரம்
என்னவென்று தெரிய வேண்டுமானால் நம் பழைய பதிவை பார்க்கவும்.

இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல்
செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும்
இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் இணையப்பக்கத்தில் படம் சரியாக லோட் ஆக உதவும் $('#myImage').attr('src', 'image.jpg').load(function()  {  alert('Image Loaded'); }); பிரவுஷரில் அடிக்கடி செக்யூரிட்டி (captcha) படம் தெரிவதில் உள்ள பெரிய பிரச்சினையை தீர்க்கும் நிரல். 
இன்று ஜனவரி 22 ஞானப்பிரகாசர்" src="http://winmani.files.wordpress.com/2010/01/nenaprakasar.jpg?w=100&h=100" alt="" style="margin: 0px 7px 2px 0px; padding: 4px; float: left; display: inline;" width="100" height="100"> பெயர் : ஞானப்பிரகாசர், மறைந்த தேதி : ஜனவரி 22, 1947 பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர், தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துகாட்ட பெரும்பங்கு வகித்தவர்களில் ஒருவர். வளம் மிக்க தமிழ் சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான பல நூல்களை எழுதி உள்ளார். யாழ்ப்பாண தமிழ் நேசப்புலவர். தமிழ் சேவைக்கு நன்றி

உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க


உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?

முடியும்!

ஜிமெயிலிலிருந்து உங்கள் ஹாட்மெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை படிக்கவும், அதேசமயம் ஜிமெயிலில் இருந்த படியே ஹாட் மெயில் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும்! எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேல்புறமுள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு Accounts and Import என்ற பகுதிக்கு செல்லுங்கள்.



இந்த பக்கத்தில் கீழே உள்ள Check mail using POP3: என்பதற்கு நேராக உள்ள Add POP3 email account என்ற பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்து திறக்கும் Add a mail account you own என்ற விண்டோவில் Email address என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களுடைய ஹாட்மெயில் விலாசத்தை கொடுத்து Next Step பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்தப் பக்கத்தில் உங்களுடைய windows Live கணக்கினுடைய பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, கீழே உள்ள settings அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப் படுத்தி (குறிப்பாக நீங்கள் ஜிமெயிலில் படித்த ஹாட்மெயில் மின்னஞ்சலை, ஹாட் மெயிலில் விட்டு வைக்க வேண்டுமா? என்பதற்கு "Leave a copy of retrieved messages on the server" என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.) பிறகு Add Account பொத்தானை அழுத்துங்கள்.



அடுத்த திரையில் Yes, I want to be able to send mail as… என்பதை தேர்வு செய்து Next Step க்ளிக் செய்யுங்கள்.

இறுதியாக ஜிமெயிலிருந்து உங்கள் ஹாட் மெயில் கணக்கிற்கு ஒரு வெரிபிகேஷன் மெயில் வரும் அதனை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்து Verify பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவுதான்.. இனி உங்கள் ஹாட்மெயில் கணக்கிலுள்ள மின்னஞ்சல்களை ஜிமெயிலில் பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல். ஜிமெயில் Compose திரையில் From க்கு நேராக உள்ள ட்ராப் டவுன் லிஸ்டில் ஹாட்மெயில் கணக்கை தேர்வு செய்து, ஜிமெயிலில் இருந்தபடியே, ஹாட்மெயிலில் மின்னஞ்சல் செய்யலாம்

சமையலறையில்

  • தினமும் காலையில் கேஸை நேரடியாகப் பற்ற வைக்கப் போகாமல், ஜன்னல் கதவுகளைத்திறந்து வைத்து சற்று நேரம் கழித்து பற்றவைக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளலாம்.
  • எந்த சுவிட்சும் ஆன்/ஆஃப செய்யும் முன்பு காஸ் வாசனை வருகிறதா என்று பார்த்தல் மிகவும் நலம். If you smell gas, do not light anything or switch on / off anything in that area.
  • நறுக்கவேண்டிய பொருட்களை முன்னரே தயாராக நறுக்கி தயாராக வைத்துக் கொண்டும், தாளிதப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டும் அடுப்பு பற்ற வைக்கலாம்.
  • குழிவான குறுகிய பாத்திரங்களை அடுப்பில் வைப்பதைவிட அகலமான பாத்திரங்கள் வைப்பதால் எளிதில் சூடாகி, எரிபொருளை மிச்சப்படுத்தும். அடுப்பில் என்றால் குழிவான குறுகிய வாய் உடைய பாத்திரங்கள் கை சுடுவதைக் கட்டுப்படுத்தும். கொதிக்கும்பொழுது கன்வெக்ஷன் முறையில் கிளறிவிட வேண்டிய அவசியம் குறையும். மின் அடுப்பு காஸ் இவற்றுக்கு அகலப் பாத்திரங்கள்தான் சரி. அம்மாவிடம் சொல்லிப் பாருங்கள் "அவ்வளவு அகலச் சட்டியில் வடை போடணும்னா எவ்வளவு எண்ணெய் செலவாகும் தெரியுமா?" என்பார். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுங்கள்.
  • ஈயச் சொம்பு ரசம் என்றால் தனி ருசிதான். இன்னமும் என் பாட்டி ஈயச் சொம்பில் ரசம் வைக்கிறார். ஆனால் ஒன்று, கவனமில்லாமல் சீரியல் பார்க்கப் போய் விட்டாலோ, தொலை பேசிக் கொண்டிருந்தாலோ திரும்பி வந்து பார்க்கும் போது சொம்பே உருகி காணாமல் போய் இருக்கும். ( ஈயச் சொம்பை குக்கருக்குள் வைத்து ரசம் பண்ணிப் பாருங்களேன்.)
  • வேலை முடிந்தவுடன் கேஸ் சிலிண்டர் ரெகுலேடர் வால்வ் மூடி வைத்துவிடுதல் நலம்.



  • வெந்நீர், பால் போன்றவற்றுக்கு, ஏன் இட்லிக்குக் கூட induction stove வும், திரும்பச் சூடு படுத்தும் வேலைகளுக்கு microwave oven உம உபயோகித்தால் எரிபொருள் மிச்சப் படுத்தலாம்.
  • Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் load shedding தவிர்க்கலாம். ( ஆம். திரவப் பொருள்களைக் கொதிக்கவைக்கும் எந்த சமையலுக்கும் induction stove மிகவும் பொருத்தம். Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான உஷ்ண நிலை அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் மின்செலவு குறைக்கலாம்.)



  • நான் எப்பவுமே ஃபிரிட்ஜ் பால் பாக்கெட் வைக்கும்பொழுது, பாக்கெட்டின் வெளிப்புறம் நன்றாகக் கழுவி, ஏற்கெனவே இருக்கும் பால் பாக்கெட்டுகளை, பிராண்ட் பெயர் மேலே வரும் வகையில் - திருப்பி வைத்து, புது பாக்கெட்டின் நிறமில்லா வெள்ளைப் பக்கம் மேலே வரும்படி வைப்பேன். இதன் மூலம், பால் பாக்கெட்டை, ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கும்பொழுது, பழைய பால் பாக்கெட் எது, புதியது எது என்று ஈசியாகத் தெரியும்.
  • ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பதை நேரடியாக அடுப்பில் ஏற்றாமல் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து பின்னர் அடுப்பில் வைத்தால் எரிபொருள் மிச்சமாகும். ( ஃ ப்ரீசரிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்பொழுது உள்ளிருந்து சூடாவதால், வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது. பலாக்கொட்டையை சூடாக்கிப் பின் படாத பாடு பட வேண்டி வந்தது ஓவனை சுத்தம் செய்ய!)
  • ஃபிரிஜ், கேஸ் ஸ்டவ் அருகருகே இருக்கக் கூடாது. ஃ பிரிஜ் என்றில்லை. மின் பொறி உண்டாக்கக்கூடிய எந்த உபகரணமும் காஸ் அடுப்பு அருகிலோ அல்லது காஸ் அடுப்புக்குக் கீழோ கட்டாயம் இருக்கக்கூடாது.

21 January 2010

மைக்ரோமாக்ஸ் க்யூ3 டூயல் சிம்



டெக்ஸ்ட் அமைக்க குவெர்ட்டி கீ போர்டு மற்றும் இரண்டு சிம்கள் இயக்கம் என்ற இந்த இரண்டு வசதிகள் தான் தற்போது மொபைல் வாங்குவோர் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதன் அடிப்படையில் மைக்ரோமாக்ஸ் க்யூ3 டூயல் சிம் போன் வெளியாகியுள்ளது. இதன் இன்னொரு சிறப்பு குறைந்த விலை.

இதன் வண்ணத்திரை 220 x 176ரெசல்யூசனில் 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. குறைவான எடையில் கையாள்வதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீ பேட் கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன.

அழுத்துவதற்குச் சற்று எளிதாக இல்லை என்றாலும், பழக்கத்தில் சரியாகிவிடுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, சிறிய யு.எஸ்.பி. போர்ட், தனியே சார்ஜிங் போர்ட் என வாடிக்கையாளர்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் அனைத்தும் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மியூசிக் பிளேயருக்கு ஈக்குவலைசர் போன்ற அமைப்புகள் இல்லை என்றாலும், ஆடியோவின் தன்மை நன்றாக உள்ளது. ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ இயங்குகிறது. வாய்ஸ் ரெகார்டர் வசதியும் உள்ளது. வீடியோ பிளேபேக் வசதியில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

இதன் பிரவுசர் வேகமாக இயங்காவிட்டாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் நெட்வொர்க்குடன் இணைந்து இயங்குகிறது. ஆனால் ஆப்பரா மினி இன்ஸ்டால் செய்தால் வேகம் கூடுகிறது. பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் இமெயில்களை எளிதாக டவுண்லோட் செய்திட முடிகிறது. இணைக்கப்பட்டுள்ளA2DP இணைந்த புளுடூத் வசதியும் நல்ல செயல்பாட்டினைக் காட்டுகிறது.

டெக்ஸ்ட் பைல்களுக்கான இ புக் ரீடர், கரன்சி கன்வர்டர், வேர்ல்ட் கிளாக், பொழுது போக்க உதவும் புதிர் கட்ட விளையாட்டு ஆகியவையும் நமக்கு போனஸ் வசதிகளாகக் கிடைக்கின்றன. 2 ஜிபி மெமரி வரை இதில் நீட்டித்துக் கொள்ளலாம். 1.3 எம்பி கேமராவில் எடுக்கும் படங்கள் அவ்வளவு நல்ல தன்மையில் இல்லை.

பேட்டரி சாதாரண பயன்பாட்டில் இரண்டு நாட்களுக்கு தாங்குகிறது. தொடர்ந்து பேசினால் 3 மணி நேரம் பயன்படுத்தலாம். குவெர்ட்டி கீ போர்டு, இரண்டு சிம் பயன்பாடு, இணைய நெட்வொர்க் இணைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டால் ரூ.4,500க்கு இந்த போன் சரியான தேர்வாக அமையும்



20 January 2010

நச்சென்று கதை எழுதுவது எப்படி? by wathani

நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?

அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.

இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.

சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.

அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.

எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.

இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.

மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.

அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.

கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :

அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :

எப்படிக் கொலை செய்வது?

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)


இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அறிவுறுத்துகிறதா? அச்சுறுத்துகிறதா?


இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தனர். அப்போது இந்திய தரப்பின் சார்பில், இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தேர்தல் மூலம் அரசியல் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில், வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தில், இந்தியாவின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துவிடக் கூடாது என்பதில் இந்திய தரப்பு மிகுந்த அவதானமாகச் செயற்படுவதாகத் தெரிய வருகிறது.

தற்போது சரத் பொன்சேகாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும், ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெறும் சாத்தியங்கள் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கும் நிலையும், இந்திய தரப்பை பரபரப்பாக்கியுள்ளதாகவே அறிய முடிகிறது.

இதன் காரணமாகவே சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இந்திய மத்திய, தமிழக அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமான பரப்புரைகளைத் தமிழ் கூட்டமைப்பு வெளியிடக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுறுத்தலை, உத்தரவாகவே இந்தியதரப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே போன்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கபடுவது உறுதியான போது, சரத் பொன்சேகாவும், எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவும், இந்தியாவிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Up In The Air (2009) [Best of 2009 -03]

அடுத்தவர்களிடன்... “ஸாரி.. உங்களுக்கு இன்னையோட வேலை போய்டுச்சி” என சொல்வதே ஒருவனின் முழு நேர வேலையாக இருந்தால் எப்படியிருக்கும்? Up In The Air-ல் ஜார்ஜ் க்ளூனியின் 365 நாள் வேலையும் அதுமட்டும் தான்!!


கார்பொரேட் டவுன்சைஸர்ஸ் : இந்த வேலை இந்தியாவில் பிரபலமான்னு தெரியலை. இந்த நாட்டில் சக்கை போடு போடுதாம். இந்த மாதிரி கம்பெனிகளின் வேலை, பெரிய - நடுத்தர - சிறிய கம்பெனி என எந்த பாகுபாடும் பார்க்காமல்..., அதன் மேனேஜ்மெண்டிடம் பேசி.....

தோ.. பாரு...! இவன் வெட்டியா... ஆஃபீஸில் உட்கார்ந்து கிட்டு ப்லாக் எழுதிகிட்டு இருக்கான். இவனை வீட்டுக்கு அனுப்பு. இன்னொருத்தன் வெட்டியா ட்வீட்டுறான். அவனையும் அனுப்பு. இப்ப உன் கம்பெனிக்கு நான் வருசம் இத்தனை டாலர் சேமிச்சி கொடுத்திருக்கேன். இதனால இவ்வளவு டாக்ஸ் பெனிஃபிட் வேற அரசாங்கத்திடம் இருந்து கிடைக்குது. என் பங்கு இத்தனை பர்சண்டை கொடு

-என பேசியே...., ஒரே கம்பெனியில்... ஆண்டுக் கணக்காக உட்கார்ந்த இடத்தை தேய்த்தவர்களை, சொல்லாமல் கொல்லாமல் வேலையை விட்டு அனுப்புவார்கள். இதில் இன்னொரு கேட்டகிரி..., அந்த ஆஃபீஸில் வேறு எதோ வேலையில் உட்கார்ந்து கொண்டு, நன்றாக வேலை பார்க்கும் ஆட்களை, அடுத்தக் கம்பெனிக்கு... விலைக்கு விற்பார்கள். ஒரு 20-30 பேரை, ஃப்ளைட்டின் முதல் வகுப்பில்... அமெரிக்கா முழுக்க.. 300 நாட்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால்... இது எத்தனை பணம் புழங்கும் தொழிலாக இருக்கும்?

பார்ப்பதற்கு பராக்கு மாதிரியிருக்கலாம். ஆனால்.. இவர்களின் சம்பாத்தியம் யோசிக்க முடியாதது. இப்படியெல்லாம் ஒரு வேலையிருக்குன்னே நமக்குத் தெரியாத போது, இவர்கள் சம்பாதிக்கும் காசைப் பற்றி எப்படித் தெரியும்!

Up In The Air, இதே பெயரில் வெளிவந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட, ஒரு ரொமாண்டிக் + மேனேஜ்மெண்ட் கவிதை.


ராய்ன் (க்ளூனி), இது போன்றதொரு கம்பெனியில்... தனக்குச் சம்பந்தமில்லாத இன்னொரு கம்பெனியில் வேலை செய்யும்... ‘யாரென்றே தெரியாத’ ஆட்களை எல்லாம் ‘ஃபயர்’ செய்வது மட்டுமே முழு நேரத் தொழில். இந்த வேலையால்.. 300 நாட்களுக்கும் மேல் விமானத்திலேயே இருப்பவர். ஒருவரின் வேலை காலி என்று சொல்லும் போது, அதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற அனுபவம் அதிகம். கல்யாணம் ஆகாத + பிடிக்காத, உறவு முறைகளில் விருப்பமில்லாத, நாற்பது சம்திங் பிரம்மச்சாரி.

இந்த பயணங்களில், இதே போல அடிக்கடி பயணிக்கும், உறவு முறைகள் பிடிக்காத, அலெக்ஸ் என்ற நடுத்தர வயது பெண்ணை, ஏர்போர்ட்டில் சந்தித்ததும்... காதல் என்றெல்லாம் ஃபிலிம் காட்டாமல், கட்டிலில் மட்டும் ஃபிலிம் காட்டுகிறார்கள் (ஒரே சீன் மட்டும்தான். அதுவும் அரைகுறை).

‘வேலை போய்விட்டது’ என்ற வேலை செய்பவருக்கே... ‘வேலை போய்விடும்’ அபாயம் வருகிறது. அவர் கம்பெனிக்கு புதிதாக வரும் நேடலி என்ற இளம் பெண், வெப் கான்ஃபரன்ஸ் மூலமாக அமெரிக்காவின் எந்த மூலையில் இருப்பவரையும் எந்த செலவும் இல்லாமல், ‘டாட்டா’ சொல்ல முடியும் என்ற ஐடியாவை கொடுக்க.......

இந்த இருவருக்கும்... யாருடைய முறை சரியானது என்று, கம்பெனிக்கு காட்ட வேண்டிய கட்டாயாம். இதற்காக இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். வேலை போய்விட்டது என்று சொல்லும் போது..., எதிராளியிடம் ஏற்படும் உணர்ச்சி குவியலுக்கு, இணையம் நல்லதா, நேரடி ஆறுதல் + ஆப்ஷன் நல்லதா.. என கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறார்கள். அதற்காக நேடலி கொடுக்கும் விலை...மிகப் பெரிது.

இந்தப் பயணத்தில் இடையில்.. அலெக்ஸும் சேர்ந்து கொள்ள, இந்த மூவருக்குள்ளும் பல்வேறு மாற்றங்கள். அந்த மாற்றத்தில்.. ராய்ன் கொடுக்கும் விலை இன்னும் பெரியது.

இதையெல்லாம் பார்க்க.... உங்களுக்குத் தேவை, இரண்டு மணி நேரமும் கொஞ்சம் பொறுமையும். முடிந்திருக்கும் போது...., எத்தனை சோகமாக சொல்ல வேண்டிய காட்சிகளை, இத்தனை உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் சொன்ன ஜேஸன் ரெய்ட்மேனுக்கு கை தட்டிக் கொண்டிருப்பீர்கள்.


இந்த வருட ஆஸ்கரில், ஐந்தில் ஒரு இடம் க்ளூனிக்கு உறுதி. இன்னும் மனுசனுக்கு அதே செக்ஸி சிரிப்பு. நடுத்தர வயதின் நரையில்... அழகும், கம்பீரமும் இன்னும் கூடுமாமே (அப்படியாஉண்மைத் தமிழன்?). எலிஸபெட்டா கிட்ட சொல்லி சுத்திப் போடணும். கோல்டன் க்லோபிற்கு ஏற்கனவே நாமினேட் ஆனதுமில்லாம... வரிசையா.. விருதுகளை அள்ளி குவிச்சிருக்கார். வேற எதுவும் சொல்லுறதா இல்லை. நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.

வெரா ஃபார்மிகா : இது பொம்பளை க்ளூனிங்க. படம் பார்த்து முடிக்கிற வரைக்கும்.. எங்கயோ பார்த்திருக்கோமே-ன்னே நினைச்சிட்டு இருந்தா... Orphan -ல அம்மா கேரக்டர். அப்புறம் The Boy in the Striped Pajamas படத்திலும் கூட!! எனக்கும் அழகும், கம்பீரமும் வந்துகிட்டே இருக்கா....! இப்பல்லாம் மறந்துடுறேன்.

நேடலியா வர்ற ஆனா கெண்ட்ரிக். இந்த மூணு பேர் மட்டும்தான் 90% படத்தில். யாராவது ஒருத்தர் லூசில் விட்டாலும்.. இன்னொருத்தர் ஸ்க்ரீனை கண்ட்ரோலுக்கு எடுத்துக்குவாங்க போல. நம்மூரு ஹீரோயின்களுக்கு..... ஜூஸ் குடிச்ச பின்னாடி கொஞ்சம் டைம் இருந்தா.. இந்தப் படத்தை போட்டு காட்டணுங்க. நாண்டுக்குவாங்க!!!

ஜூனோ-ங்கற மிகப் பெரிய ஹிட் படத்தை கொடுத்துட்டு (பட்ஜெட் : 6, வசூல் : 230), கிட்டத்தட்ட மூணு வருடமாக காணமல் போன ஜேஸன்... பேக் வித் பேங்....!!! என்னை விட நாலு மாசம் சின்னப் பையன். மிக மிக அருமையான படங்களா இயக்கிட்டு இருக்காரு. நமக்கு.. அதை எழுதக் கூட சரியா வர மாட்டேங்குது.

ஆனால்.. எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்தாலும், நல்லப் படங்கள் என்றால் காசு பார்க்க முடியாது என்ற உலக விதியை பின்பற்றி... ரொம்ப நாட்களாக.. தடுமாறி..., லிமிடட் ரிலீஸாக இருந்து... நோட்டம் பார்த்தப் பின், ரெண்டு, மூணு வாரம் முன்பு.. ‘வைட் ரிலீஸ்’ ஆக்கினார்கள். இருபத்தைந்து மில்லியனுக்கு, அறுபது மில்லியன் ரிடர்ன்.

படம் பார்த்து முடிச்சவுடன்... எதோ... மனசை பிசையற மாதிரி ஒரு ஃபீலீங் வருமே... அதுக்கு மீ த கேரண்டி.

19 January 2010

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி: எம்.கே.நாராயணன் புகார் New Delhi செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 11:19 AM IST மதிப்பீடு இல்லை

இமெயில்பிரதிவலைப்பூக்கள் digg del.icio.us newsVine
புதுடெல்லி, ஜன. 19-

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான எம்.கே.நாராயணன் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாதுகாப்பு சம்பந்தமான ரகசியங்களை திருடவும், அவற்றை அழிக்கவும் சீனா பலமுறை முயற்சித்து வருகிறது. பாதுகாப்பு ஆலோசகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ்களை அனுப்பி இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

சமீபத்தில் பாதுகாப்பு ஆலோசனை அலுவலக கம்ப்யூட்டருக்கு ஒரு இ.மெயில் வந்தது. பி.டி.எப். கோப்புடன் “திரோசன்” என்ற வைரசை இணைத்து இந்த இ.மெயிலை அனுப்பி இருந்தனர். இதை கண்டுபிடித்து வைரசை அழித்துவிட்டோம்.

இந்த வைரஸ் மூலம் சீனாவில் இருந்தபடியே இங்குள்ள தகவல்களை டவுன்லோடு செய்து விட முடியும். மேலும் தகவல்களையும் முற்றிலும் அழித்துவிட முடியும். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சீனா முயற்சி பலிக்கவில்லை.

சீனாவின் இந்த முயற்சி முதன் முறை அல்ல. பலமுறை இப்படி செய்து இருக்கிறார்கள்.
கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி

கம்ப்யூட்டரில் வைரசை அனுப்பி பாதுகாப்பு ரகசியங்களை அழிக்க சீனா முயற்சி

: எம்.கே.நாராயணன் புகார் New Delhi செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 11:19 AM IST மதிப்பீடு இல்லை

இமெயில்பிரதிவலைப்பூக்கள் digg del.icio.us newsVine
புதுடெல்லி, ஜன. 19-

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான எம்.கே.நாராயணன் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாதுகாப்பு சம்பந்தமான ரகசியங்களை திருடவும், அவற்றை அழிக்கவும் சீனா பலமுறை முயற்சித்து வருகிறது. பாதுகாப்பு ஆலோசகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ்களை அனுப்பி இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

சமீபத்தில் பாதுகாப்பு ஆலோசனை அலுவலக கம்ப்யூட்டருக்கு ஒரு இ.மெயில் வந்தது. பி.டி.எப். கோப்புடன் “திரோசன்” என்ற வைரசை இணைத்து இந்த இ.மெயிலை அனுப்பி இருந்தனர். இதை கண்டுபிடித்து வைரசை அழித்துவிட்டோம்.

இந்த வைரஸ் மூலம் சீனாவில் இருந்தபடியே இங்குள்ள தகவல்களை டவுன்லோடு செய்து விட முடியும். மேலும் தகவல்களையும் முற்றிலும் அழித்துவிட முடியும். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சீனா முயற்சி பலிக்கவில்லை.

சீனாவின் இந்த முயற்சி முதன் முறை அல்ல. பலமுறை இப்படி செய்து இருக்கிறார்கள்.

18 January 2010

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

[ செவ்வாய்க்கிழமை, 19 சனவரி 2010, 05:06.52 மு.ப GMT ]
விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும்

பெரும் பணத்துடன் கோத்தபாய ராஜபக்சே சிங்கப்பூர் ஓட்டம்!

இலங்கையின் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் இலங்கை அரசு கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

இதன் பின்ணணி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை கோத்தபாய பெரும்தொகையான பணத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார் என இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த நேரத்தில் கோத்தபாய சிங்கப்பூர் சென்றால் அது பெரும் சந்தேகத்தைக் தோற்றுவிக்கும் என்பதால் இவருக்கு மாரடைப்பு என்றும், சிகிச்சைக்காகவே இவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தனக்குச் சொந்தமாக உள்ள பெருந்தொகையான கறுப்புப் பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றி அதனை அங்கு வைப்பில் இட அல்லது முதலீடுசெய்ய இவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதாக கொழும்பில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை இவர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் வெளியாகும் எந்த நாளிதளும் இது குறித்து எச்செய்திகளையும் வெளியிடவில்லை என்பதும் சிங்கப்பூர் தமிழர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் பல பயனுள்ள மென்பொருட்கள் trial ஆகவே உள்ளது. எனவே இதனை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

ஒவ்வொரு முறை நாம் அந்த மென்பொருளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதும் அது நம் கணிணியின் தேதியையும் அந்த மென்பொருள் பதியப்பட்ட தேதியையும் ஒப்பிடுகிறது. நமது கணிணியின் தேதி trial தேதிக்குள் இருந்தால் பயன்படுத்த அனுமதிக்கிறது. நமது கணிணியின் தேதியை trial நாளுக்குள் இருக்குமாறு செய்ய Run As Date என்கிற மென்பொருள் பயன்படுகிறது. இதனை Windows 2000, XP, 2003 and Vista ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.




நீங்கள் பதியும் மென்பொருளின் தேதியை நினைவு வைத்துக்கொள்ளவும், பின்னர் அதன் trial period முடியும் வரை இதனை சாதாரணமாக பயன்படுத்தலாம்.
Trial period முடிவதற்கு ஒரு நாள் முன்பு Run As Date மென்பொருளை இயக்கவும்.
பெரும்பாலான மென்பொருட்களை இதனைக்கொண்டு பயன்படுத்த முடியும்.

12 January 2010

திறந்த மென்பொருட்கள் காணப்படும் இணையதளங்கள்


திறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீகாரத்துடன் மென்பொருட்களின் தராதரத்திற்கு அமைவாக அவற்றின் நெகிழ்வு போக்குடன் மென்பொருட்களின் பாதுகாப்பு தன்மைக்கு ஏற்ப உருவாக்கப்படும் மென்பொருட்கள் ஆகும்.


இத்தகைய திறந்த மென்பொருட்கள் பொதுவாக இலவசமாகவே கிடைக்கின்றன. திறந்த மென்பொருட்கள் இலாப நோக்கமற்ற அரசு சாராத ஒரு துறையாக செயற்படுகின்றன. இவை உயர் தரத்திலான மிகவும் பாதுகாப்பான மென்பொருட்களை வழங்க உத்தரவாதமளிக்கின்றன.


இத்தகைய மென்பொருட்கள் காணப்படும் சில இணையத்தளங்கள்











Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More