கந்தசாமி படத்தின் பரபரப்பு பட்டென்று அடங்கிப்போக ஸ்ரேயா அவ்வளவுதான் என்று சொன்ன வாய்களை குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு என மூன்று படங்க்களில் நடித்து முடித்து குட்டி பட்த்தின் ரிசல்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரேயா.
கந்தசாமி படத்தின் பரபரப்பு பட்டென்று அடங்கிப்போக ஸ்ரேயா அவ்வளவுதான் என்று சொன்ன வாய்களை குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு என மூன்று படங்க்களில் நடித்து முடித்து குட்டி பட்த்தின் ரிசல்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரேயா.
ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts(Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.
இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.
தமது நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் தமிழ்சினிமாவின் பிதாமகன் என்று ஆனந்த விகடனால் பாராட்டு பெற்ற இயக்குனர் பாலா. பாலா கடைசியாக இயக்கிய நான் கடவுள் படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ்ப் பற்று கொண்ட இயக்குனர்கள் கொண்டாடுகிறார்கள்.
முதல்வாழ்த்து மணிரத்தினத்திடமிருந்து. இரண்டாவது பூங்கொத்து வழியே ரஜினி. பாலா அலுவலகத்தில் குவிந்து வரும் பூங்கொத்துக்கள் போலவே உதவி இயக்குனர்களும் பாலா அலுவலக்கத்தில் கூட்டம் கூட்டமகாக் குவிந்து பாலாவை வாழ்த்துகிறார்கள். பாலா இளையதலைமுறையிடம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அத்தகையது.பாலாவிற்கு wathani சார்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நேரத்தில் பாலா பற்றி ஆ.வி வெளியிட்ட 25 குறிப்புகள் 4தமிழ் நேயர்களின் பார்வைக்கு மீள் பந்தி வைக்கிறோம்
* பாலாவின் பெயர்இ பாலசுப்ரமணியன்.ஆனால்இ வீட்டில் அனைவரும் அழைப்பது ‘அபேஸ் பாலையா’. வீட்டில் காசு முதற்கொண்டு பொருட்கள் திடீர் திடீரெனக் காணாமல் போனதினால் கிடைத்த சிறப்புப் பட்டம் !
* பாலு மகேந்திராவுக்கும் சிவக்குமாருக்கும் பாலா ‘மூத்த மகன்’. சேரனுக்குஇ‘மருமகனே’..... சீமானுக்குஇ ‘இளையவரே’.......ரோஹிணிக்குஇ‘மகனே’...விக்ரமுக்குஇ ‘டார்லிங்’....சூர்யாவுக்குஇ ‘அண்ணா’ !
* மணிரத்னம்இ பாலாவின் ரசிகர்.பாலாவோ.....மணிரத்னத்தின் பக்தர்.இந்த அபூர்வ நட்பு அதிகம் வெளியே தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தள்ளுவதில் மணி சாருக்கு ஏனோ பிரியம் !
* இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே பீடி குடித்தவர்.....இப்போதும் புகைக் பழக்கம் தொடர்கிறது. யார் முன்னும் தயங்காமல் புகைப்பவர். மனைவி முன் மட்டும் சிகரெட்டைத் தொடவே மாட்டார் !
* விழாஇ நிகழ்ச்சி என பாலாவைக் கூப்பிட்டால்இ ஓடி ஒளிவார். மைக் முன் நிறுத்திவிட்டால்இ ‘வாழ்த்துக்கள்’ என ஒற்றைச் சொல்லோடு மேடையில் இருந்து இறங்கிவிடுவார் !
* பாலாஇஎப்போதுமே அப்பா பிள்ளை. அப்பாவியாகவே வாழ்ந்தஇ ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அப்பாவின் நினைவு மேலெழும்பினாலோஇ அவரைப்பற்றிய பேச்சு கிளம்பினாலோஇ கண்ணீரில் நனைந்து அழுகையில் முடிவார் !
* மனிதப் பற்களால் ஆன கபால மாலையும்இஸ்படிக மாலையும் அணிந்திருப்பார். காசி சென்று திரும்பிய பிறகு ஏற்பட்ட மாற்றம் இது !
* நான்கு சர்வதேச விருதுகள்இ நான்கு தேசிய விருதுகள்இ ஐந்து மாநில விருதுகள்இ ஐஐ ஃபிலிம்பேர் விருதுகள்....இதுவரை பாலா இயக்கியிருக்கும் நான்கு படங்களுக்காகக் கிடைத்த விருதுகள் இவை !
* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போனில் பேசினாலோஇ எஸ்.எம்.எஸ். ஒலி எழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார் !
* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள் தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார் !
* அதிரடி ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர் பாலா.நண்பர்களோடு சேர்ந்தால்இ பழைய சினிமா பாடல்களும்இ அதிரடி மிமிக்ரியுமாகக் கலகலப்பு தான் !
* பாலா தீவிரமான நாத்திகர். ஆனால்இ அவர் மனைவி எப்போதுஇ எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார் !
* பாலாவுக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் பிடித்தவை. விஜய் டி.வி-யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர். சன் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு? வீட்டில் இருந்தால் இரண்டு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்ப்பார் !
* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷீட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும் !
* பாலாவுக்கு மிகவும் பிடித்தது தனிமை.அதே அளவுக்கு வேடிக்கை பார்ப்பதுஇவம்பிழுப்பதுஇ ஊர் சுற்றுவதும் பிடிக்கும் !
* ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர். புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதுஇ மனசு தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். ஆனால்இ பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர் !
* பாலாவின் திருமண ஏற்பாடுகளின் போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்டஇ விளையாட்டாக ‘பிதா மகன்’ வில்லன் ரோலுக்கு ‘மகாதேவன்’ என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு !
*பாலாவின் படத்தில்‘சன்ரைஸ் ஷாட்’ டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது.ஆனால்இ சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும் !
* நண்பர்கள் மேல் பெரும் மரியாதையும்இ அன்பும் வைத்திருப்பவர். சமூகத்தின் பெரிய அந்தஸ்தில் ஆரம்பித்துஇ சாதாரண நிலைவரை நிறைய நண்பர்கள் அவர் தரப்பில் இருக்கிறார்கள் !
* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான்.காலையில் இரண்டு இட்லிஇமதியம் ஒரு கைப் பிடிச் சாதம்இஇரவு இரண்டு தோசைஇ ‘ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன் !’ என கண்கள் விரித்துச் சொல்வார் !
* சற்று இடைவேளைக்குப் பிறகு ஆர்யாஇ விஷால் நடிக்க கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் படம் செய்கிறார் பாலா. நிச்சயம் குறுகிய காலத் தயாரிப்பு. கலக்கலான காமெடிப் படமாமே !
* ‘நான் கடவுள்’ படத்துக்காக ஆர்யாஇ பூஜா இருவரின் உழைப்புக்கு உறுதியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் !
* இயக்குநர் மணிரத்னம்இ பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரின் மலர்ந்த சிரிப்பினில் ‘உயிரைத் தரிசிக்கிறேன்’ என்பார் பாலா. பாலாவுக்கு இஷ்டமான புன்னகை தெய்வங்கள் இவர்கள் !
* அப்பா பழனிச்சாமிஇசிவ பக்தர். அவர் 50 வருடங்களாகப் பூஜை செய்துவந்த குட்டி சிவலிங்கம் மட்டுமே பாலா இப்போது பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஒரே பொருள் !
*மிகவும் பிடித்த இடம் பெரிய குளம். பின்னால் உறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விநோத அமைதியை எப்பவும் ரசிப்பவர் பாலா !
''வெள்ளையாகக் கிடைக்கிற எந்த உணவும் ஆரோக்கியமானதில்லை. பால், அரிசி சாதம், மாவு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய ஐந்தும் அதில் பிரதானம்.'' ஆரோக்கிய வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் இருக்கிற பிரபலங்கள் பலரும் இவற்றைத் தவிர்ப்பதாக சொல்லக் கேட்டிருக்கலாம். காபி, டீயை விட்டால், பாலைத் தவிர்க்கலாம். கோதுமைக்கு மாறினால், அரிசி சாதத்தை மறக்கலாம். உப்பைக் குறைத்தால் பிரச்சினையில்லை. மாவு உணவுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதில் பெரிய சிரமங்கள் இருக்க வாய்ப்பில்லை. சர்க்கரை...? |
இயக்குனர் பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசி விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது. அவரது இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகிய நான் கடவுள் படத்தின் மூலமே, சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
இது தவிர நான் கடவுள் படத்தின் ஒப்பனைக்காக, சிறந்த மேக்கப் கலைஞருக்கான தேசிய விருது மூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடித்த பூஜாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவ்விருது கிடைக்கவில்லை. பேஷன் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவுக்கு அவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகர், ஜோகுவா மராத்திப் படத்தில் நடித்த உபேந்திராவுக்கு கிடைத்தள்ளது.
சிறந்த தமிழப்படம் என்ற விருதினை சூர்யா நடித்தவாரணமாயிரம் திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது என சினிமா வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 22, 2010
நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது
யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை
ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன்
யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.
யூடியூப்" src="http://winmani.files.wordpress.com/2010/01/youtube1.jpg?w=400&h=350" alt="" style="margin: 0px auto; display: block;" width="400" height="350">இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால்
YouTube is currently experiencing some downtime issues, reporting
a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server
error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்
விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை
என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ
ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை
அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்
முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம்
இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து
கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில்
உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம்
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இராஜதந்திரம்
என்னவென்று தெரிய வேண்டுமானால் நம் பழைய பதிவை பார்க்கவும்.
இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல்
செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும்
இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் இணையப்பக்கத்தில் படம் சரியாக லோட் ஆக உதவும் $('#myImage').attr('src', 'image.jpg').load(function() { alert('Image Loaded'); }); பிரவுஷரில் அடிக்கடி செக்யூரிட்டி (captcha) படம் தெரிவதில் உள்ள பெரிய பிரச்சினையை தீர்க்கும் நிரல்.
இன்று ஜனவரி 22 ஞானப்பிரகாசர்" src="http://winmani.files.wordpress.com/2010/01/nenaprakasar.jpg?w=100&h=100" alt="" style="margin: 0px 7px 2px 0px; padding: 4px; float: left; display: inline;" width="100" height="100"> பெயர் : ஞானப்பிரகாசர், மறைந்த தேதி : ஜனவரி 22, 1947 பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர், தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துகாட்ட பெரும்பங்கு வகித்தவர்களில் ஒருவர். வளம் மிக்க தமிழ் சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான பல நூல்களை எழுதி உள்ளார். யாழ்ப்பாண தமிழ் நேசப்புலவர். தமிழ் சேவைக்கு நன்றி
உங்கள் Hotmail கணக்கை Gmail லில் உபயோகிக்க முடியுமா?
முடியும்!
நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?
அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.
இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.
சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.
அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.
எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.
இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.
மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.
அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.
கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :
அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :
எப்படிக் கொலை செய்வது?
(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாட்டினைத் தெரிவித்திருந்தனர். அப்போது இந்திய தரப்பின் சார்பில், இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் தேர்தல் மூலம் அரசியல் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில், வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தில், இந்தியாவின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துவிடக் கூடாது என்பதில் இந்திய தரப்பு மிகுந்த அவதானமாகச் செயற்படுவதாகத் தெரிய வருகிறது.தற்போது சரத் பொன்சேகாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும், ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெறும் சாத்தியங்கள் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கும் நிலையும், இந்திய தரப்பை பரபரப்பாக்கியுள்ளதாகவே அறிய முடிகிறது.
இதன் காரணமாகவே சந்திப்பினை மேற்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இந்திய மத்திய, தமிழக அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமான பரப்புரைகளைத் தமிழ் கூட்டமைப்பு வெளியிடக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுறுத்தலை, உத்தரவாகவே இந்தியதரப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கபடுவது உறுதியான போது, சரத் பொன்சேகாவும், எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவும், இந்தியாவிற்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.