ஹைதி தீவில் நேற்று முன்தினம் இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.இந்த நிலையில் நேற்றிரவு ஹைதி தீவின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை ஐ.நா. மீட்புக்குழு ஹைதியில் முகாமிட்டு மீட்புப்பணியை தீவிரப்படுத்தியது. ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி செத்து கிடப்பது தெரிந்தது.
ஐ.நா.அமைதிக்குழுவை சேர்ந்த படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஹைதிக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகின்றன.
0 comments:
Post a Comment