24 January 2010

பாலாவிற்கு முதல் வாழ்த்து மணிரத்தினம், ரஜனி பூங்கொத்து!

தமது நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் தமிழ்சினிமாவின் பிதாமகன் என்று ஆனந்த விகடனால் பாராட்டு பெற்ற இயக்குனர் பாலா. பாலா கடைசியாக இயக்கிய நான் கடவுள் படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ்ப் பற்று கொண்ட இயக்குனர்கள் கொண்டாடுகிறார்கள்.

முதல்வாழ்த்து மணிரத்தினத்திடமிருந்து. இரண்டாவது பூங்கொத்து வழியே ரஜினி. பாலா அலுவலகத்தில் குவிந்து வரும் பூங்கொத்துக்கள் போலவே உதவி இயக்குனர்களும் பாலா அலுவலக்கத்தில் கூட்டம் கூட்டமகாக் குவிந்து பாலாவை வாழ்த்துகிறார்கள். பாலா இளையதலைமுறையிடம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு அத்தகையது.பாலாவிற்கு wathani சார்பில் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த நேரத்தில் பாலா பற்றி ஆ.வி வெளியிட்ட 25 குறிப்புகள் 4தமிழ் நேயர்களின் பார்வைக்கு மீள் பந்தி வைக்கிறோம்
* பாலாவின் பெயர்இ பாலசுப்ரமணியன்.ஆனால்இ வீட்டில் அனைவரும் அழைப்பது ‘அபேஸ் பாலையா’. வீட்டில் காசு முதற்கொண்டு பொருட்கள் திடீர் திடீரெனக் காணாமல் போனதினால் கிடைத்த சிறப்புப் பட்டம் !
* பாலு மகேந்திராவுக்கும் சிவக்குமாருக்கும் பாலா ‘மூத்த மகன்’. சேரனுக்குஇ‘மருமகனே’..... சீமானுக்குஇ ‘இளையவரே’.......ரோஹிணிக்குஇ‘மகனே’...விக்ரமுக்குஇ ‘டார்லிங்’....சூர்யாவுக்குஇ ‘அண்ணா’ !
* மணிரத்னம்இ பாலாவின் ரசிகர்.பாலாவோ.....மணிரத்னத்தின் பக்தர்.இந்த அபூர்வ நட்பு அதிகம் வெளியே தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தள்ளுவதில் மணி சாருக்கு ஏனோ பிரியம் !
* இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே பீடி குடித்தவர்.....இப்போதும் புகைக் பழக்கம் தொடர்கிறது. யார் முன்னும் தயங்காமல் புகைப்பவர். மனைவி முன் மட்டும் சிகரெட்டைத் தொடவே மாட்டார் !
* விழாஇ நிகழ்ச்சி என பாலாவைக் கூப்பிட்டால்இ ஓடி ஒளிவார். மைக் முன் நிறுத்திவிட்டால்இ ‘வாழ்த்துக்கள்’ என ஒற்றைச் சொல்லோடு மேடையில் இருந்து இறங்கிவிடுவார் !
* பாலாஇஎப்போதுமே அப்பா பிள்ளை. அப்பாவியாகவே வாழ்ந்தஇ ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அப்பாவின் நினைவு மேலெழும்பினாலோஇ அவரைப்பற்றிய பேச்சு கிளம்பினாலோஇ கண்ணீரில் நனைந்து அழுகையில் முடிவார் !
* மனிதப் பற்களால் ஆன கபால மாலையும்இஸ்படிக மாலையும் அணிந்திருப்பார். காசி சென்று திரும்பிய பிறகு ஏற்பட்ட மாற்றம் இது !
* நான்கு சர்வதேச விருதுகள்இ நான்கு தேசிய விருதுகள்இ ஐந்து மாநில விருதுகள்இ ஐஐ ஃபிலிம்பேர் விருதுகள்....இதுவரை பாலா இயக்கியிருக்கும் நான்கு படங்களுக்காகக் கிடைத்த விருதுகள் இவை !
* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போனில் பேசினாலோஇ எஸ்.எம்.எஸ். ஒலி எழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார் !
* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள் தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார் !
* அதிரடி ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர் பாலா.நண்பர்களோடு சேர்ந்தால்இ பழைய சினிமா பாடல்களும்இ அதிரடி மிமிக்ரியுமாகக் கலகலப்பு தான் !
* பாலா தீவிரமான நாத்திகர். ஆனால்இ அவர் மனைவி எப்போதுஇ எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார் !
* பாலாவுக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் பிடித்தவை. விஜய் டி.வி-யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர். சன் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு? வீட்டில் இருந்தால் இரண்டு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்ப்பார் !
* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷீட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும் !
* பாலாவுக்கு மிகவும் பிடித்தது தனிமை.அதே அளவுக்கு வேடிக்கை பார்ப்பதுஇவம்பிழுப்பதுஇ ஊர் சுற்றுவதும் பிடிக்கும் !
* ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர். புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதுஇ மனசு தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். ஆனால்இ பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர் !
* பாலாவின் திருமண ஏற்பாடுகளின் போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்டஇ விளையாட்டாக ‘பிதா மகன்’ வில்லன் ரோலுக்கு ‘மகாதேவன்’ என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு !
*பாலாவின் படத்தில்‘சன்ரைஸ் ஷாட்’ டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது.ஆனால்இ சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும் !
* நண்பர்கள் மேல் பெரும் மரியாதையும்இ அன்பும் வைத்திருப்பவர். சமூகத்தின் பெரிய அந்தஸ்தில் ஆரம்பித்துஇ சாதாரண நிலைவரை நிறைய நண்பர்கள் அவர் தரப்பில் இருக்கிறார்கள் !
* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான்.காலையில் இரண்டு இட்லிஇமதியம் ஒரு கைப் பிடிச் சாதம்இஇரவு இரண்டு தோசைஇ ‘ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன் !’ என கண்கள் விரித்துச் சொல்வார் !
* சற்று இடைவேளைக்குப் பிறகு ஆர்யாஇ விஷால் நடிக்க கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் படம் செய்கிறார் பாலா. நிச்சயம் குறுகிய காலத் தயாரிப்பு. கலக்கலான காமெடிப் படமாமே !
* ‘நான் கடவுள்’ படத்துக்காக ஆர்யாஇ பூஜா இருவரின் உழைப்புக்கு உறுதியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் !
* இயக்குநர் மணிரத்னம்இ பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரின் மலர்ந்த சிரிப்பினில் ‘உயிரைத் தரிசிக்கிறேன்’ என்பார் பாலா. பாலாவுக்கு இஷ்டமான புன்னகை தெய்வங்கள் இவர்கள் !
* அப்பா பழனிச்சாமிஇசிவ பக்தர். அவர் 50 வருடங்களாகப் பூஜை செய்துவந்த குட்டி சிவலிங்கம் மட்டுமே பாலா இப்போது பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஒரே பொருள் !
*மிகவும் பிடித்த இடம் பெரிய குளம். பின்னால் உறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விநோத அமைதியை எப்பவும் ரசிப்பவர் பாலா !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More