இயக்குனர் பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசி விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது. அவரது இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகிய நான் கடவுள் படத்தின் மூலமே, சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இது தவிர நான் கடவுள் படத்தின் ஒப்பனைக்காக, சிறந்த மேக்கப் கலைஞருக்கான தேசிய விருது மூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடித்த பூஜாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவ்விருது கிடைக்கவில்லை. பேஷன் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவுக்கு அவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகர், ஜோகுவா மராத்திப் படத்தில் நடித்த உபேந்திராவுக்கு கிடைத்தள்ளது. சிறந்த தமிழப்படம் என்ற விருதினை சூர்யா நடித்தவாரணமாயிரம் திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது என சினிமா வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment